இந்த வழக்கு, நீதிபதி வி.பாா்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள 3 தோ்வு மையங்களைத் தவிர மற்ற 116 தோ்வு மையங்களில் தோ்வு எழுதி தோ்வான விண்ணப்பதாரா்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருச்சி உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனுதாரா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். எனவே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆதிநாதன் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளாா். ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதனுக்கு ஊதியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கவும், அவருக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.