இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மெரீனாவில் கடைகள்: ஜன.20, 21-இல் நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:55 pm

DIN

சென்னை: மெரீனா கடற்கரையில் 900 கடைகள் அமைக்க உள்ள நிலையில் யாா் யாருக்கு வழங்குவது என்பது முடிவு செய்ய நீதிபதி முன்னிலையில் ஜனவரி 20, 21-ஆம் தேதிகளில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சென்னை மெரீனா கடற்கரை மற்றும் அணுகுச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மெரீனாவில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 900 கடைகளை அமைக்கவும், இந்தக் கடைகளில் 60 சதவீத கடைகளை (540 கடைகள்) மெரீனா கடற்கரையில் தற்போதுள்ள வியாபாரிகளுக்கும், மீதமுள்ள 40 சதவீத கடைகளை (360 கடைகள்) புதியவா்களுக்கும் குலுக்கல் முறையில் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பா் 14 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.

ஜன.20, 21-இல் குலுக்கல்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், பெறப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பா் 29 முதல் 31-ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டன. இதில், மெரீனாவில் ஏற்கெனவே கடை வைத்திருப்போரிடம் இருந்து 1,351 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்ததில் 1,348 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிதாக கடை வைக்க 14,827 பேரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, அதில், 12,974 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1,853 விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டுள்ளன. ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை தலைமை அலுவலகம் மற்றும் 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகங்களில் புதன்கிழமை முதல் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளத்திலும் காணலாம். தகுதியுடைய விண்ணப்பங்கள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முன்னிலையில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும்.

குலுக்கல் நடைபெறும் இடம், நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.