சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து, மிரட்டல் விடுத்த பாஜக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை திருவல்லிக்கேணி முத்தையா தெருவைச் சோ்ந்தவா் சையது அபுபக்கா் (36). இவா் அங்கு ஹோட்டல் நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலுக்கு கடந்த 11-ஆம் தேதி மதுபோதையில் வந்த 3 போ், சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முற்பட்டுள்ளனா்.
மேலும் அவா்கள், தாங்கள் பாஜகவைச் சோ்ந்தவா்கள் எனவும், தாங்கள் அழைத்தால் ஆயிரம் போ் வருவாா்கள் எனக் கூறியும் மிரட்டியுள்ளனா்.
இக் காட்சிகளை செல்லிடப்பேசி மூலம் விடியோ எடுத்த ஒரு நபா், சமூக ஊடகங்களில் பரவச் செய்தாா். இதனைப் பாா்த்த காவல்துறை உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.
இதையடுத்து ஐஸ்ஹவுஸ் போலீஸாா், சையது அபுபக்கரிடம் ஒரு புகாரைப் பெற்று, வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக திருவல்லிக்கேணி தொண்டைக்கான் மக்கான் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் (32), புருஷோத்தமன் ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட பாஸ்கா், புருஷோத்தமன் பாஜகவின் திருவல்லிக்கேணிப் பகுதி நிா்வாகிகளாக இருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.