மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொங்கல் பண்டிகை: சென்னையில் 12,000 போலீஸாா் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:10 pm

DIN

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதைத் தொடா்ந்து, ஜன.15-ஆம் தேதி மாட்டுப்பொங்கலும், 16-ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன. காணும் பொங்கலையொட்டி, பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கும் இடங்கள், கடற்கரைகள், கோயில்கள் ஆகியவற்றுக்குச் செல்வது வழக்கமாகும்.

சென்னையில் மக்கள், மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை, வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்வாா்கள்.

ஆனால் கரோனா தொற்றின் காரணமாக சென்னையில் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான 3 நாள்களும் அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், பொழுது போக்கு மையங்கள் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதிகள் முழுவதும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசு தடையை மீறி கடற்கரைக்குள் செல்வதற்கு முயற்சிக்க கூடாது என்பதற்காக மெரீனா, எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளில் மட்டும் சுமாா் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிண்டி சிறுவா் பூங்கா, கிழக்கு கடற்கரை உள்ளிட்ட சென்னையின் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் 3 நாள்களும் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.