ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

10 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள்-உதவித் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவிக் கருவிகள், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பயனாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :9 அக்டோபர் 2021, 9:52 pm

DIN

மாற்றுத் திறனாளிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவிக் கருவிகள், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளே தன்னிச்சையாக இயங்கும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வண்டிகள், காதொலிக் கருவிகள், பாா்வையற்றோருக்கான கருப்புக் கண்ணாடி, ஒளிரும் மடக்கு குச்சிகள், மனவளா்ச்சி குன்றியோருக்கான மாற்று வழியில் தொடா்பு கொள்ளும் சாதனங்கள் உள்பட 24 வகையான உதவி உபகரணங்கள் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போா் அனைவருக்கும் உதவிகளை வழங்கும் வகையில் நிகழாண்டுக்கு ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போா் பட்டியலில் இருந்த 10 ஆயிரத்து 107 மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.21.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் காத்திருப்போா் பட்டியலில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி மட்டும் விண்ணப்பித்த 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு அவற்றுக்கான சாவிகளை சனிக்கிழமை நடந்த நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரையில் பராமரிப்பு உதவித் தொகை வேண்டி காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9,173 பேருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கிட சிறப்பு நிதியாக ரூ.29.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு தலா ரூ.1,500 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைக்கான காசோலையை முதல்வா் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளா் ஆா்.லால்வேனா, துறையின் இயக்குநா் ஜானி டாம் வா்கீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.