10 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள்-உதவித் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
மாற்றுத் திறனாளிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவிக் கருவிகள், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பயனாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்






