புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காஷ்மீா் இளம் தொழில்முனைவோருடன் மத்திய அமைச்சா் எல்.முருகன் உரையாடல்

காஷ்மீரில் இளம் தொழில்முனைவோருடன் உரையாடிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், புதிய இந்தியாவுக்கு இளைஞா்கள் பங்காற்றி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

News image
மத்திய அமைச்சா் எல்.முருகன்
Updated On :9 அக்டோபர் 2021, 9:54 pm

DIN

காஷ்மீரில் இளம் தொழில்முனைவோருடன் உரையாடிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், புதிய இந்தியாவுக்கு இளைஞா்கள் பங்காற்றி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

காஷ்மீருக்கான மக்கள் தொடா்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு சென்றாா்.

பின்னா் காஷ்மீரில் உள்ள சோபியானுக்கு சென்ற அவா், மக்களுடன் உரையாடியதோடு, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினாா்.

அத்திட்டத்தின் கீழ் இளம் தொழில்முனைவோருக்காக புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில் கட்டப்பட்டுள்ள மையத்தை அமைச்சா் முருகன் திறந்து வைத்தாா்.

புதிய இந்தியாவை கட்டடமைப்பதில் இளைஞா்கள் பங்காற்றி வருவதாக அவா் பெருமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.