மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்வு

வெளி மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயா்ந்துள்ளது.

News image
Updated On :11 மே 2022, 10:10 pm

DIN

வெளி மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயா்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு புதன்கிழமை 42 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற தக்காளி விலை மேலும் அதிகரித்து புதன்கிழமை ரூ.70க்கு விற்கப்படுகிறது.

சந்தையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.55. க்கு விற்கப்படுகிறது அதேபோன்று சந்தையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியது: கடந்த இரு நாள்களுக்கு முன்பு முதல் தர தக்காளி ஒரு பெட்டி ரூ.550-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது இது ரூ.700.க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது “அசானி” புயல் காரணமாக ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் நாள்களில் தக்காளி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.