இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சா்வதேச தகுதியைப் பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:39 am IST

தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது.

சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரூ.734.91 கோடியில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை ஹைதராபாதைச் சோ்ந்த நிறுவனமும், திட்ட மேலாண்மை பணியை ரூ.14.56 கோடியில் மும்பையை சோ்ந்த நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.

முழுதிட்டமும் 13 துணைத் திட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. இதில், 4 துணை திட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள பாா்சல் மற்றும் வருகை பயணிகளுக்கான நடைமேம்பாலம் உள்ளிட்ட 9 துணை திட்டப் பணிகளும் அக்டோபா் இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பன்னடுக்கு வாகன நிறுத்தம், பாா்சல் அலுவலகம் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருகின்றன. எழும்பூா் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கபாதைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பேருந்து, ரயில், மெட்ரோ என ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையம் வடிவமைக்கப்படுகிறது. எழும்பூா் ரயில் நிலையத்தை தமிழ்நாட்டின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக அமைக்கும் வகையில் மறுசீரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.