எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அனந்தபுரி ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம்

சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றமடைகிறது.

News image
Updated On :27 செப்டம்பர் 2023, 8:21 am IST


சென்னை: சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றமடைகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு தினமும் இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் மாலை 3.40 மணிக்கும் அனந்தபுரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் அக்.1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படவுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இதன் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்.1- முதல் சென்னை எழும்பூரிலிருந்து 20 நிமிஷம் முன்னதாக அதாவது இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து 50 நிமிஷம் முன்னதாக அதாவது பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

மேலும், சென்னை - கொல்லம் இடையே இயக்கப்படும் ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக அதிகாலை 3.20 மணிக்கும், திருநெல்வேலிக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 6.05 மணிக்கும் வந்தடையும்.

இதுபோல் கொல்லத்திலிருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கும், மதுரைக்கு இரவு 11.15 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கும், திருச்சிக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.15 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 6.13 மணிக்கு பதிலாக அதிகாலை 4.43 மணிக்கும், தாம்பரத்துக்கு காலை 6.43 மணிக்கு பதிலாக அதிகாலை 5.13 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.