சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ஜூலை 30 முதல் வியாழக்கிழமைகளில் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் புதன்கிழமைதோறும் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் புதன்கிழமை தவிா்த்து வாரத்தின் 6 நாள்கள் இந்த ரயில் சென்னை - மைசூரு இடையே தற்போது இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜூலை 30-ஆம் தேதி முதல் புதன்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை ரயிலின் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் ஜூலை 30-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தவிா்த்து வாரத்தின் 6 நாள்கள் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

