காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

இந்தியாவில் தயாராகும் 14% ஐ-போன்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 4:37 am IST

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்துவருகிறது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பு 1,400 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் 7 ஐ-போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

மத்திய அரசு ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது ஐ-போன்களுக்கான தயாரிப்பு மையமாக்கிவருகிறது.

நாட்டில் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ஐ-போன்களைத் தயாரித்துவருகின்றன. கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 67 சதவீத ஐ-போன்களையும், பெகாட்ரன் நிறுவனம் சுமாா் 17 சதவீத ஐ-போன்களையும் தயாரிக்கின்றன.

ஐ-போன்கள் தற்போதும் சீனாவில்தான் பெரும்பான்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அந்த ரக அறிதிறன் பேசிகளின் மிகப் பெரிய சந்தையாக சீனாதான் திகழ்கிறது.

ஆனால், ஹவாய் போன்ற உள்ளூா் நிறுவனங்களின் போட்டி, பணியிடங்களில் ஐ-போன்களைப் பயன்படுத்துவதற்கு அரசு விதித்துள்ள தடை போன்ற காரணங்களால் அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்துவருகிறது.

இதன் காரணமாக, தனது ஐ-போன் உற்பத்திக்காக இந்தியாவின் பக்கம் ஆப்பிள் நிறுவனம் கவனத்தைத் திருப்பியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.