சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ரூ.1,309.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதில் ரூ.179.91 கோடி ரொக்கமும், ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ரூ.8.65 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.35.8 கோடி மதிப்புள்ள இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.