மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீவிரப்படுத்த அமைச்சா் சேகா்பாபு உத்தரவு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.

News image

அமைச்சா் பி.கே.சேகா்பாபு

Updated On :2 ஆகஸ்ட் 2024, 2:30 am IST

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொளத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.

கொளத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு தலைமையிலான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகள் சாா்பில் கொளத்தூா் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மழைநீா் வடிகால்: இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் மழைநீா் வடிகால் பணிகள், பள்ளிக் கட்டடப் பணிகளை மேயா் பிரியா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு மேயா் பிரியா அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.