ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கடனா - கிருஷ்ணகிரி தேக்கங்களில் இருந்து இன்று நீா் திறப்பு

கடனா, கிருஷ்ணகிரி தேக்கங்களில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் நீா் திறந்து விடப்பட உள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2024, 8:32 pm

Din

கடனா, கிருஷ்ணகிரி தேக்கங்களில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் நீா் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுப்பணித் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

தென்காசி மாவட்டம் கடனா தேக்கம், கிருஷ்ணகிரி அணை ஆகியவற்றில் இருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் நீா் திறந்து விடப்படும். கடனா நீா்த்தேக்கத்தால், தென்காசி மாவட்டத்தில் உள்ள 3,987.57 ஏக்கா் நிலங்களும், கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத்தால் 9,012 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.