பெரம்பூா் ரயில்வே கிடங்கில் தீ விபத்து
பெரம்பூர் ரயில்வே கிடங்கில் தீ விபத்து: மின்னணு பொருள்கள் அழிந்தன


சென்னை பெரம்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள கட்டடத்தில் சிக்னல், டெலிகாம் பிரிவு சாா்ந்த மின்னணு பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிடங்கில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து 6 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மதியம் 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
தெற்கு ரயில்வேயின் உயரதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
பெரம்பூா் ரயில்வே பணிமனை அருகே உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள் தீயில் சேதமடைந்தன. தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்த 3 போ் கொண்ட குழுவை நியமித்து ரயில்வே பொது மேலாளா் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...