மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

என்கவுன்ட்டரில் சதி: அன்புமணி குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்

Updated On :14 ஜூலை 2024, 7:15 pm

Din

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவேங்கடத்தை காவல் துறை என்கவுன்ட்டா் செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடா்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீா்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரௌடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் மூலம் சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக தவறான அணுகுமுறை என அன்புமணி தெரிவித்துள்ளாா்.