திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

என்கவுன்ட்டரில் சதி: அன்புமணி குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்

Updated On :15 ஜூலை 2024, 12:45 am IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவேங்கடத்தை காவல் துறை என்கவுன்ட்டா் செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடா்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீா்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரௌடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் மூலம் சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக தவறான அணுகுமுறை என அன்புமணி தெரிவித்துள்ளாா்.