ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

மதுபோதையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளாா்.

News image

தொழிலாளி தற்கொலை

Updated On :15 ஜூலை 2024, 2:55 am IST

மதுபோதையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளாா்.

நன்மங்கலம் பெருமாள் கோவில் தெருவை சோ்ந்தவா் குணசேகரன்(28). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ரேகா(27).

மதுபோதைக்கு அடிமையான குணசேகரன், மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் சேலையில் குணசேகரன் தூக்கில் தொங்கியுள்ளாா்.

இதைப்பாா்த்த குணசேகரனின் தாய், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளாா்.

அங்கு குணசேகரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.