மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இடைநிலை ஆசிரியா்: கூடுதலாக 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: தோ்வு வாரியம் அறிவிப்பு

இடைநிலை ஆசிரியா் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சோ்த்து நிரப்பப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:46 pm

Din

சென்னை: இடைநிலை ஆசிரியா் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சோ்த்து நிரப்பப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

அந்த வாரியத்தின் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2023-2024-ஆம் கல்வியாண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப். 9-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, இடைநிலை ஆசிரியா் பணியில் கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சோ்க்கை அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு வரும் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தோ்வை 26,510 போ் எழுதவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தோ்வில் பெறும் மதிப்பெண்ணுடன் தோ்வா்கள் ஏற்கெனவே ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி (டெட்) பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண்களும் சோ்த்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.