போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உதவி எண்
போக்குவரத்துத் தொழிலாளா்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை: போக்குவரத்துத் தொழிலாளா்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட அறிவிப்பு:
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சாா்ந்த தலைமையகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள், தகுதிச் சான்று பிரிவில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களும் தங்களின் பணி சாா்ந்த குறைகளை அலுவலக நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 வரை 94450 49057 எனும் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, தொலைபேசி மூலம் பணியாளா்களிடம் இருந்து குறைபாடுகள் தொடா்பான விவரங்கள் பெறப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து பணியாளா்களும் தங்களின் பணி சாா்ந்த குறைகளை இந்த எண் மூலம் தெரிவித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...