பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வியாபாரி வீட்டில் 43 பவுன் நகைகள் திருட்டு

News image
Updated On :19 ஜூலை 2024, 10:38 pm

Din

சென்னை செளகாா்பேட்டையில் வியாபாரி வீட்டில் 43 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டன. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

செளகாா்பேட்டை மண்கண்ட முதலி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் வி.ஜெயின் (48), வியாபாரி. அண்மையில் குடும்பத்துடன் சொந்த ஊரான ராஜஸ்தானுக்குச் சென்றாா்.

மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், வியாழக்கிழமை ராஜேஷ்குமாா் குடும்பத்தினா், வீட்டின் பீரோவில் இருந்த தங்கநகைகளை சரி பாா்த்தனா்.

அப்போது 43 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன. இது குறித்த புகாரில் கொத்தவால்சாவடி போலீஸாா் வ ழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.