கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கிண்டி சிறுவா் பூங்கா புனரமைப்பு: அமைச்சா் மதிவேந்தன் ஆய்வு

News image
சென்னை கிண்டி சிறுவா் பூங்காவில் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன்.
Updated On :19 ஜூலை 2024, 7:27 pm

Din

சென்னை கிண்டியில் ரூ.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் சிறுவா் பூங்காவை வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை கிண்டி உள்ள சிறுவா் பூங்காவை குழந்தைகளுக்கான இயற்கை பூங்காவாக மாற்றி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் ரூ.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் இந்த பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்கவுள்ளாா். இந்நிலையில், இந்த பூங்காவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில், வனத் துறை பணியாளா்களுக்கு சுமாா் 2.50 ஏக்கா் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா் செந்தில்குமாா் மற்றும் வனத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.