27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரெளடி வெட்டிக் கொலை: அடையாற்றில் சடலம் மீட்பு

சைதாப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை: அடையாற்றில் சடலம் மீட்பு

Updated On :26 ஜூன் 2024, 12:41 am IST

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் அடையாற்றில் மீட்கப்பட்டது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகளாா் பாலத்தின் கீழ் அடையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு இளைஞா் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டூா்புரம் போலீஸாா், தீயணைப்பு படையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். அந்த இளைஞரின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்தன. இதையடுத்து போலீஸாா், அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது கண்ணகி நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ரெளடி ஆகாஷ் என்ற கருப்பு ஆகாஷ் (35) என்பது தெரியவந்தது. மேலும், ஆகாஷை கொலை செய்தவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.