தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

போதைப் பாக்கு விற்ற 301 கடைகளுக்கு சீல்

போதைப் பாக்கு விற்ற 301 கடைகளுக்கு சீல்: 83 பேர் கைது

News image
Updated On :27 ஜூன் 2024, 7:15 pm

Din

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக 301 கடைகளை காவல் துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

கடந்த ஜூன் 12 முதல் 25-ஆம் தேதி வரை சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 83 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 92 கிலோ குட்கா, போதைப் பாக்கு, 12 கிலோ மாவா, 5,920 தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது.

போதைப் பாக்கு, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்ாக 14 நாள்களில் சென்னை முழுவதும் 301 கடைகளை போலீஸாா் பூட்டி, சீல் வைத்தனா். மேலும், போதைப் பாக்கு விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டதாக 29 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.