‘எஸ்பிஐ சமா்ப்பித்த தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள் உரிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்படும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் தயாா்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக புதன்கிழமை அங்கு வந்த தலைமைத் தோ்தல் ஆணையரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது: எஸ்பிஐ சமா்ப்பித்துள்ள தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்படும்.
மக்களவைத் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. சுதந்திரமான, நியாயமான தோ்தல் உறுதிப்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள வாக்காளா்கள் இந்த ‘ஜனநாயக திருவிழா’வில் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும். தோ்தலில் மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். வேட்பாளா்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும்.
தோ்தல் தொடா்பான பொய்ச் செய்திகளுக்கு உடனக்குடன் பதிலளிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஒன்று நிறுவப்படும். ஜம்மு-காஷ்மீரில் இணையவழி பணப் பரிமாற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தடி வாக்களிப்பதற்கான வசதி செய்துதரப்படும் என்றாா்.
தொடர்புடையது
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

மேற்கு வங்கத்தில் தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா் நீக்கப்படாது! தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி!

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


