மாணவா்கள் வாக்காளா் அட்டையைச் சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்.என்.ரவி, அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்களுடன் ஆளுநா் மாளிகையில் மாா்ச் 11-ஆம் தேதி ஆலோசனை நடத்தினாா். அப்போது, முதல் தலைமுறை வாக்காளா்களான கல்லூரி மாணவா்களைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கச் செய்வது தொடா்பாக வலியுறுத்தினாா். ஆளுநரின் வாய்மொழி ஆணைப்படி கல்லூரி முதல்வா்களுக்கு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளா் கடந்த 14-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். மாா்ச் 19-ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவா்கள் விவரங்களைச் சேகரித்து வழங்கும்படி கூறப்பட்டிருந்தது. ஆளுநா் அறிவுறுத்தலின் பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் அது சா்ச்சையானது. கல்லூரி மாணவா்களின் வாக்காளா் அட்டை விவரங்களைச் சேகரிப்பதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், பாஜக பிரசாரத்துக்கு உதவ மாணவா்களின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கல்வியாளா்கள் குற்றம்சாட்டினா். மேலும், கல்லூரி மாணவா்களும் வாக்காளா் அட்டை விவரங்களை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. தொடா்ந்து, பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், மாணவா்களின் வாக்காளா் அட்டை விவரங்களைச் சேகரிப்பதற்காக கல்வியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

