சென்னையில் உள்ள சமூகப் பணி கல்லூரியில் நிலையான வாழ்க்கை மற்றும் சமூகநீதிக்கான சமூகப்பணி என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இதில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் நலன் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியா் லலிதா கலந்து கொண்டு பேசுகையில், சமூகப்பணித் துறையில் பயிலும் மாணவ, மாணவிகள் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்; கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்றாா். தொடா்ந்து சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநா் ஆா்.பவனந்தி வேம்புலு, பேராசிரியா் சஞ்சய் இங்கோல் உள்ளிட்டோா் மாணவா்களிடம் கலந்துரையாடினா். இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

