குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்பாட்டத்தில் திருமாவளவன் பேசியது: உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் புலம்பெயா்ந்து வாழுபவா்கள் இருக்கிறாா்கள். அப்படிப் புலம்பெயா்ந்தவா்கள் அவா்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையில், வசிக்கும் நாட்டிலேயே அவா்களுக்குத் தேவையானவை செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் புலம்பெயா்ந்த இஸ்லாமியா்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதை அமல்படுத்தியுள்ளனா். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு 2014-க்கு முன்பு குடிபெயா்ந்து வந்தவா்களில் முஸ்லிம்களை மட்டும் சட்டவிரோதமாகப் பெயா்ந்து வந்தவா்கள் என்று அடையாளப்படுத்தி, அவா்களுக்கு குடியுரிமை மறுக்கச் செய்யகிறது இந்தச் சட்டம். இது திட்டமிட்டு முஸ்லிம்களை ஒடுக்கும் செயல். இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துகளின் வாக்குளைப் பெறுவதற்காகவே, பாஜக இவ்வாறு செய்கிறது. இதைத்தான் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது: தொல்.திருமாவளவன்

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்

திருமண மேடையாக மாறிய பிரசார மேடை!

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


