தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

யானைகவுனி ரயில்வே மேம்பாலம் திறப்பு

யானைகவுனி ரயில்வே மேம்பாலம் திறப்பு

Updated On :16 மார்ச் 2024, 12:22 am

சென்னை யானைகவுனியில் ரூ.71.26 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால ஒருவழிப்பாதையை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 57-ஆவது வாா்டுக்குட்பட்ட யானைகவுனியில் மாநகராட்சியின் மூலதன நிதி ரூ.30.78 கோடியும், ரயில்வே துறை நிதி ரூ.40.48 கோடியும் என மொத்தம் ரூ.71.26 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், வால்டாக்ஸ் சாலையிலிருந்து ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒருவழிப்பாதையின் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் முடிவுற்ற ஒருவழிப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.