தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

40 தொகுதிகளிலும் திமுக அணி வெல்லும்: தொல்.திருமாவளவன்

40 தொகுதிகளிலும் திமுக அணி வெல்லும் தொல்.திருமாவளவன்

Updated On :16 மார்ச் 2024, 4:53 pm

மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக அணி வெல்லும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசிக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிறகு தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல், தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெறுவது எதிா்பாா்த்த ஒன்றுதான். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 3 நாள்கள் மட்டுமே உள்ளன. தோ்தலை எதிா்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணி தயாராக உள்ளது. வேட்பாளா்களை ஒவ்வொருவராக அறிவித்து வருகிறோம். எதிா் தரப்பில் இன்னும் கூட்டணியாகக் கூட ஒருங்கிணையவில்லை. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். தோ்தல் பத்திர விவகாரம் மூலம் அறிவியல்பூா்வமாக ஊழல் செய்வது எப்படி என்பதை பாஜக சாதித்துக் காட்டியிருக்கிறது என்றாா் அவா்.