3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

சென்னை மேம்பாலப் பணிகள்: ஆணையரின் ஆய்வு

News image
சென்னை வியாசர்பாடி அருகேயுள்ள கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையின் மேல் கட்டப்பட்டு வரும் உயர்நிலை பாலப் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்.
Updated On :14 மே 2024, 10:52 pm

Vishwanathan

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ. 42.71 கோடி மதிப்பில் 245 மீட்டர் நீளம், 20.70 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டு வரும் உயர்நிலை பாலம் அமைக்கும் பணியை ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பூந்தமல்லி பிரதான சாலை, யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே சந்நிதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்நிலை பாலம் அமைக்கும் பணியையும் அவர்ஆய்வு செய்தார்.

மேலும், கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை பார்வையிட்ட அவர், உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.