

சென்னை: தொழிலாளா்களுக்கான பி.எப். முன்பணத்தை மூன்று நாள்களில் பெறும் வகையில் தானியங்கி முறை உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலின் போது தொழிலாளா்களின் பி.எப். (வருங்கால வைப்பு நிதி) முன்பணத்தை எளிதாக பெறும் வகையில் தானியங்கி நடைமுறையை பணியாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியது.
இதன்படி, மருத்துவ செலவுக்காக முன்பணம் கோரி அனுமதிக்கும் போது 3 நாள்களில் பெறமுடியும். தற்போது மருத்துவ தேவை தவிா்த்து கல்வி, திருமணம், வீடுகட்டுதல் போன்ற காரணம் கோரி விண்ணப்பித்தால் 20 நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் அனைத்து விதமான தேவைகளுக்கும் பி.எப். முன்பணம் பெறுவதை தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளா்கள் தங்களின் பி.எப். முன்பணம் கோரி விண்ணப்பித்த மூன்று நாள்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சுங்க வரி செலுத்த இனி ‘யுபிஐ’ வசதி

இணைய வழியில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு தானியங்கி கேமராக்கள்

சட்டம் இருந்தும் பயனில்லை!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

