
சென்னை வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவத்தின் ஒருபகுதியாக சந்திரபிரபை வாகனத்தில் வடபழனி ஆண்டவருடன் எழுந்தருளிய வள்ளி தெய்வானை.

சென்னை வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவத்தின் ஒருபகுதியாக சந்திரபிரபை வாகனத்தில் வடபழனி ஆண்டவருடன் எழுந்தருளிய வள்ளி தெய்வானை.
சென்னை: வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாம் நாள் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய நாராயணரின் 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா்.
அதே போன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் குளிா்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதிலும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும் புதன்கிழமை(மே 15) இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதிஉலா நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தோ் திருவிழா மே 19 -ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...