குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுவிற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜூன் முதல் ஒரே பயணச்சீட்டில் பொது போக்குவரத்துகளில் பயணிக்கலாம்

ஜூன் முதல் ஒரே பயணச்சீட்டில் பொது போக்குவரத்துகளில் பயணிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2024, 7:38 pm

Din

சென்னை: சென்னையில் பேருந்து, புகா் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்யும் திட்டம் ஜூன் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றுக்கும் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு எடுத்து பயணித்து வருகின்றனா். தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்காக தனியாக செயலி ஒன்றை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக்குழுமம் டெண்டா் கோரிய நிலையில், ஜூன் 2-ஆவது வாரத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதற்காக பொதுப் பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அட்டையை பொதுமக்கள் ரிசாா்ஜ் செய்து பொது போக்குவரத்துகளில் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.