மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
சென்னை விமான நிலையம்
Updated On :27 மே 2024, 8:41 pm

Din

சென்னை விமான நிலையத்துக்கு இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் உள்ள தனியாா் விமான நிறுவன அலுவலகத்துக்கும், மேலும் இரு தனியாா் அலுவலகங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு இணையதளம் மூலம் மா்ம நபா்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனா். அதில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் தனியாா் நிறுவனத்தினா் சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு அந்தத் தகவல்களை அனுப்பி வைத்தனா்.

உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநா் தலைமையில் உயா்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அந்த இணையதள தகவல்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அந்த மிரட்டல் கடிதம் போலியான இணையதள முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் போலியானது எனவும் தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அதோடு, விமானநிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் விமானநிலைய பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானநிலையத்துக்குள் வரும் பயணிகள் கடும் சோதனைகளுக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

விமானநிலையத்தின் வாகன நிறுத்தம் பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். போலி இணையதள முகவரியை உருவாக்கி, அதன் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.