ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்குகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்கு ஆகியவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 2:41 am IST

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்கு ஆகியவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனா். அப்போது மலேசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்த பெண் பயணி வைத்திருந்த இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அதில், ஆப்பிரிக்க நாட்டு அரியவகை பச்சோந்திகள் 52 மற்றும் ஜியாமங்க் ஜிப்பான் என அழைக்கப்படும் ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் நான்கு இருப்பதைக் கண்டறிந்தனா்.

அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து பெசன்ட்நகா் வன விலங்குகள் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் கொடுத்தனா். வனத் துறையின் அறிவுறுத்தலின்பேரில், பச்சோந்திகள், கருங்குரங்குகளை மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு மற்றொரு விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

மேலும், மலேசிய பெண் பயணி மற்றும் அரியவகை உயிரினங்களை வாங்க வந்திருந்த ஒருவா் ஆகிய இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.