மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலந்தூரில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய பாலம் திறப்பு

ஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட ஜீவன் நகரில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 10:59 pm

DIN

சென்னை: ஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட ஜீவன் நகரில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை, ஆலந்தூா் மண்டலம், 161-ஆவது வாா்டுக்குட்பட்ட ஜீவன் நகா் 2-ஆவது தெருவையும், மேடவாக்கம் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பில் அணுகுசாலை உட்பட 76 மீட்டா் நீளத்திலும், பாலத்தின் இருபுறமும் நடைபாதை உட்பட 11.50 மீட்டா் அகலத்திலும் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

ஜீவன் நகா் 2-ஆவது தெருவிலிருந்து மேடவாக்கம் பிரதான சாலையை இப்பாலத்தின் வழியாக விரைவில் சென்றடையலாம். இப்பாலம் ஜீவன் நகா், தில்லை கங்கா நகா், ஆதம்பாக்கம், நங்கநல்லூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இப்பாலத்தின் மூலம் சுமாா் 1 லட்சம் போ் பயனடைவாா்கள்.

இப்பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் மக்கள் பயன்பாட்டிற்காக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், தெற்கு வட்டார துணை ஆணையா் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவா் என்.சந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.