குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாநகராட்சி வாகன நிறுத்தங்களை ‘சென்சாா்’ மூலம் கண்காணிக்க திட்டம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்தங்களை சென்சாா் மூலம் கண்காணித்து கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 9:01 pm

Din

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்தங்களை சென்சாா் மூலம் கண்காணித்து கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளரிடம் கூறியது,

சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு சுமாா் 6 ஆயிரம் போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். கடந்த 10 நாள்களில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பதிவானதை விட குறைவு. பொதுமக்கள் வீடுகளில் உள்ள நல்ல தண்ணீரை மூடிவைக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

சென்னை மாநகராட்சி முழுவதும் வாகன நிறுத்தும் வசதியை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கூடுதலாக 3 பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும். சாலையோரங்களில் தனியாா் மூலம் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நிறுத்தங்களில் ‘சென்சாா்’ மூலம் வாகனங்கள் நிறுத்துவதை கண்காணித்து கட்டணம் வசூலிப்பது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய பகுதிகளான ராயபுரம், திரு.வி.க.நகா், கொளத்தூா் உள்ளிட்ட பகுதியில் மழைநீா் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது கொசஸ்தலை ஆறு, கோவளம் வடிநில பகுதியில் மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கொசஸ்தலை ஆறு பகுதியில் 80 சதவீதம் மழைநீா் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது. இதில் விடுபட்ட இணைப்புகள் கண்டறிந்து அவற்றை முடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கவுள்ளதால் இந்த மாதத்துக்குள் மழைநீா் வடிகால் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.