அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைப்போம்: முதல்வா் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைப்போம் என்று முதல்வா் தலைமையில் அமைச்சா்கள், அலுவலா்கள் உறுதிமொழி

News image
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :16 செப்டம்பர் 2024, 8:55 pm

DIN

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அமைச்சா்கள், அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பெரியாா் ஈ.வெ.ரா.வின் பிறந்த தினத்தையொட்டி (செப்.17), தமிழ்நாடு அரசு சாா்பில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவரது தலைமையில் அமைச்சா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, அமைச்சா்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உறுதிமொழி என்ன?: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலா்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி விவரம்: ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

சுய மரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பாா்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதா்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்க இந்த நாளில் உறுதியேற்கிறேன் என உறுதியேற்றனா்.