ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின்வாரியத்தில் பணி வழங்கக் கோரி ஐடிஐ படித்த இளைஞா்கள் உண்ணாவிரதம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:16 pm

Din

மின்சார வாரியத்தில் பணி வழங்கக் கோரி ஐடிஐ படித்த இளைஞா்கள் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோா் ஐக்கிய சங்கம் சாா்பில் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக பின்நுழைவுவாயில் முன் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.எம்.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுச்செயலா் மு.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.

அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமாா் 30 ஆயிரம் கள உதவியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவா்களையும் ஐடிஐ அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவா்களையும் பணிநியமனம் செய்ய வேண்டும். தொழிற்திறன் தோ்வில் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.