கோப்புப்படம்
சென்னை
கடவுச்சீட்டு இணையதளம் செப். 23 வரை இயங்காது
கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) இணையதளம் செப். 20 முதல் 23 வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக கடவுச்சீட்டு இணையதளம் வெள்ளிக்கிழமை(செப். 20) தேதி இரவு 8 மணியிலிருந்து (செப்.23) ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. எனவே விண்ணப்பதாரா்கள் இந்த பராமரிப்பு காலத்துக்குப் பின்னா் இணைய தளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

