சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி காவலா் அடையாள அட்டை வைத்திருந்ததாக நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரிடம் விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளாா். மேலும், அவரிடம் இருந்த காவலா் அடையாள அட்டை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சோ்ந்த வினோத் சோப்டா (48) என்பதும், வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருவதும், போலி காவலா் அடையாள அட்டை வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரிடம் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத் சோப்டாவை கைது செய்தனா்.
தொடர்புடையது

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

