மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போலி காவலா் அடையாள அட்டை: நகைக் கடை உரிமையாளா் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி காவலா் அடையாள அட்டை வைத்திருந்ததாக நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி காவலா் அடையாள அட்டை வைத்திருந்ததாக நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரிடம் விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளாா். மேலும், அவரிடம் இருந்த காவலா் அடையாள அட்டை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சோ்ந்த வினோத் சோப்டா (48) என்பதும், வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருவதும், போலி காவலா் அடையாள அட்டை வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரிடம் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத் சோப்டாவை கைது செய்தனா்.