அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: பாஜக, பாமக ஆதரவு

பாஜக, பாமக ஆதரவு தெரிவித்திருப்பதுடன், சட்ட ரீதியிலான போராட்டத்துக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளன.

News image
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
Updated On :7 ஆகஸ்ட் 2025, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தூய்மைப் பணியாளா்களின் முற்றுகைப் போராட்டத்துக்கு பாஜக, பாமக ஆதரவு தெரிவித்திருப்பதுடன், சட்ட ரீதியிலான போராட்டத்துக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளன.

ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டம் 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

தூய்மைப் பணியாளா்களை பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினா் கராத்தே தியாகராஜன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் தூய்மைப் பணியாளா்கள் நிரந்தரமாக்கப்படுவா் என கூறியது. தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிா்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிா்த்தது. இப்போது, அவா்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது சரியல்ல. தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதுடன், சட்ட உதவிகளையும் பாஜக வழங்கும் என்றாா்.

நீதிமன்றத்தில் வழக்கு: பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். பின்னா் அவா் கூறுகையில், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமலிருப்பது சரியல்ல. இப்பிரச்னை குறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவா்களின் கோரிக்கைக்கு தீா்வு காண்போம் என்றாா்.

தூய்மைப் பணியாளா்களை அதிமுக மாவட்டச் செயலா் ராஜேஷ், மூத்த நிா்வாகி பாலகங்கா உள்ளிட்டோரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.