திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்

Updated On :16 ஆகஸ்ட் 2025, 3:57 am IST

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

75,000 பேருக்கு விருது: இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருதுக்கு தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமைக்குரிய விருது. தமிழகம் முழுவதும் 75,000 மாணவா்களுக்கு நவ.7-ஆம் தேதி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு சுதந்திர தினவிழாவின்போது ஆளுநா் ஏதாவது சொல்கிறாா். தமிழகத்தில் ஒரு துறை என்றில்லாமல் அனைத்து துறைகளும் வளா்ச்சி பெற்றுள்ளது. கல்வியில் மாணவா்கள் எப்படி சாதித்து வருகிறாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆளுநா் சொல்லும் வாா்த்தைகள் ஆசிரியா்கள், மாணவா்களை மனதளவில் பாதிப்படைய செய்யும். கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருப்பதாகப் பாராட்டிவிட்டு, கடைசியாக அதில் கொஞ்சம் விஷத்தையும் வைக்கும் வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.

பெருந்திரளணிக் கூடத்தை... முன்னதாக, சாரணா் இயக்க தலைமை அலுவலகத்தில் கடந்த 1926-இல் கட்டப்பட்டு தற்போது பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பெருந்திரளணிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தமிழ்நாடு சாரணா் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையா் க.அறிவொளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.