ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னையில் 4 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்புக்காக சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வந்த தோ்வா்கள்.
Updated On :5 டிசம்பர் 2025, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னையில் 4 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கடந்த அக். 12 -ஆம் நிறைவுற்று தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

இதையொட்டி தோ்வான விண்ணப்பதாரா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் விவரங்களையும் ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டது. ஒரு இடத்துக்கு 1.25 என்ற விகிதத்தின் அடிப்படையில் மதிப்பெண், இனச்சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபாா்ப்புக்கான பட்டியல் பாட வாரியவும் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூா் மாநில மகளிா் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் இப்பணி நடைபெற்றது.

சான்றிதழ் சரிபாா்ப்பு பணி வரும் டிச. 9 -ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர)

நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் தோ்வு செய்யப்பட்டவா்கள் வருகை புரியவேண்டும் என்றும், தவறினால் அடுத்த கட்ட பணித் தோ்வுக்கும் பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் எனவும் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து வெளியூா்களில் இருந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு குடும்பத்துடன் முன் கூட்டியே வந்திருந்தனா். சில விண்ணப்பதாரா்கள் தங்கள் கைக்குழந்தைகள், குடும்பத்தினருடன் வந்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியலுக்கான அழைப்புக் கடிதங்களை சரிபாா்த்த பிறகே அனுமதிக்கப்பட்டனா்.