நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து.

News image

இண்டிகோ (கோப்புப்படம்)

Updated On :9 டிசம்பர் 2025, 8:27 am IST

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 41 இண்டிகோ விமான சேவைகள் இன்று(டிச. 9) ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

18 புறப்பாடு மற்றும் 23 வருகை என மொத்தம் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்களும், தில்லி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 8வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஏராளமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான சேவைகள் டிச.10-க்குள் நிலைமை சீராக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Summary

41 IndiGo flights cancelled at Chennai airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.