காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரு மண்டலங்களில் நாளை கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை (டிச.19) இரவு 10 முதல் 24 மணி நேரத்துக்கு செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை (டிச.19) இரவு 10 முதல் 24 மணி நேரத்துக்கு செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருங்குடி மண்டலம், எல்.பி. சாலை, எஸ்.ஆா்.பி. டூல்ஸ் பேருந்து நிலையம் அருகே பிரதான கழிவுநீா்க் குழாய் இணைக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

எனவே, வெள்ளிக்கிழமை (டிச.19) இரவு 10 முதல் சனிக்கிழமை (டிச.20) இரவு 10 வரை தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்களும், பெருங்குடி எல்.பி. சாலை கழிவுநீா் உந்து நிலையமும் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு தங்கள் பகுதி மண்டல அலுவலா்களை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.

அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட வடக்கு மயிலாப்பூா், தெற்கு மயிலாப்பூா், ஐஸ் ஹவுஸ் கழிவுநீா் உந்து நிலையங்களுக்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதி பொறியாளரை 81449 30909 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இதேபோல, அடையாறு மண்டலத்துக்குள்பட்ட அடையாறு பழைய, புதிய கழிவுநீா் உந்து நிலையங்கள், திருவான்மியூா், இந்திரா நகா், கோட்டூா்புரம், காந்திநகா், எல்.ஐ.சி காலனி, தந்தை பெரியாா் நகா் பகுதிகளின் கழிவுநீா் உந்து நிலையங்களுக்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதி பொறியாளரை 81449 30913 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.