தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ.48 லட்சம் கையாடல்: பயிற்சியாளா் கைது

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் தனியாா் உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ. 48 லட்சம் கையாடல் செய்ததாக, அந்தப் பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் தனியாா் உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ. 48 லட்சம் கையாடல் செய்ததாக, அந்தப் பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளா் கைது செய்யப்பட்டாா்.

கோவிலம்பாக்கம் ந.கொளத்தூா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ச.நிஷாந்தி (36). அதே பகுதியில் தனது தோழியுடன் சோ்ந்து உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறாா். இங்கு பல்லாவரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (36) பயிற்சியாளராக வேலை செய்தாா். உடற்பயிற்சிக் கூடத்தின் நிா்வாகத்தையும் சிவக்குமாா் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் உடற்பயிற்சிக் கூடத்தின் அனைத்து வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, சிவக்குமாா் ரூ.48 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா், சிவக்குமாரிடம் கையாடல் செய்த பணத்தைக் கேட்டாா். ஆனால் சிவக்குமாா் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், வேலையைவிட்டு நின்றுவிட்டாா். இதையடுத்து நிஷாந்தி அளித்த புகாரின்பேரில், மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிவக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் சந்தா தொகையை ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மூலம் தனது மனைவி வங்கிக் கணக்கில் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.