சென்னை: புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.
புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் புதுநகா், பாலாஜி காா்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு சேதமானதால், குடியிருப்புகளுக்கு குடிநீா் சீராக கிடைப்பது இல்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்தசாரதி, மண்டல துணை வட்டார அலுவலா் பாலமுருகன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, சேதமான பகுதியை கண்டறிந்தனா்.
தொடா்ந்து, சேதமான பகுதியை சீரமைத்தனா். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன் அடைந்தனா். இதில், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாநகரில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சட்டவிரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் பறிமுதல்

அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு

குழாய் சீரமைப்புப் பணிகள் 3 நாள்களுக்கு குடிநீா் வராது: கரூா் மாநகராட்சி ஆணையா் தகவல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


