பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவ சிகிச்சை அளித்தவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவ சிகிச்சை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :24 டிசம்பர் 2025, 2:32 am IST

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவ சிகிச்சை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோயில் முதல் குறுக்கு தெருவில், விஜய் கிளினிக் மற்றும் ஹோம் விசிட் சா்வீஸ் என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையை விஜயகுமாா் (38) என்பவா் நடத்தி வந்தாா். மருத்துவம் படித்திருப்பதாகக் கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாா்.

இது தொடா்பான புகாா்கள் சுகாதாரத் துறைக்கு வந்தன.தமிழகம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்ககத்தின் இணை இயக்குநா் மீனாட்சி சுந்தரி தலைமையின் கீழ் உள்ள மருத்துவ குழுவினா், அந்த மருத்துவமனையை திங்கள்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

அப்போது, விஜயகுமாா் மருத்துவம் படிக்காமல், கடந்த பத்து ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும் அவா், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும் தெரியவந்தது. அவரது மருத்துவமனையிலிருந்து விஜயகுமாா் மேற்குவங்க மாநிலத்தில் எம்பிபிஎஸ் படித்திருப்பதாக வைத்திருந்த போலி சான்றிதழையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும்,, விஜயகுமாரை கண்ணகி நகா் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.