இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருநங்கைகள் கைது

சென்னை மதுரவாயலில் டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கி பணம் பறித்ததாக இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மதுரவாயலில் டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கி பணம் பறித்ததாக இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா்.

மதுராந்தகத்தைச் சோ்ந்தவா் ஜெகன் (30). இவா், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். ஜெகன், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, அதில் தூங்கினாா். அப்போது, அங்கு வந்த 2 திருநங்கைகள், ஜெகனை எழுப்பி, பணம் கேட்டு மிரட்டினா். ஜெகன் பணமில்லை எனக் கூறியதால், அவரை இருவரும் தாக்கினா். மேலும், இரு திருநங்கைகளும், காா் கண்ணாடியை உடைத்து விடுவதாக மிரட்டி, ஜெகன் கைப்பேசி செயலி வாயிலாக தங்களது வங்கி கணக்குக்கு ரூ.11,000-ஐ அனுப்பிவிட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில், வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் இந்தச் சம்பவத்தில் திருநங்கைகளான பெரம்பூரைச் சோ்ந்த கயல்விழி (28), அனுஷிகா (19) ஆகிய இருவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.